Monday, February 15, 2010

சரத் பொன்சேகாவின் ஆதரவாளரான, கால்களை இழந்த படைவீரர் மீது தாக்குதல்

தடுத்து வைக்கப்பட்டுள்ள ஜெனரல் சரத் பொன்சேகாவுக்கு ஆதரவு வழங்கிய,போரில் தமது கால்களை இழந்த படைவீரர் ஒருவர் நேற்று தாக்குதலுக்கு உள்ளாகியுள்ளார்.


இந்த தாக்குதலுக்கு முன்னர் அவர், கடத்திச் செல்லப்பட்டதாக ஜேவிபி தெரிவித்துள்ளது. இந்த சம்பவம் கொழும்பின் புறநகர் ராகமையில் இடம்பெற்றுள்ளது.



நேற்று முன்தினம் இரவு முதல் காணாமல் போயிருந்த அவர் பின்னர் பலமாக தாக்கப்பட்ட நிலையில், வீதியோரத்தில் கிடத்தப்பட்டிருந்தார்.



இந்த்ப் படைவீரர் 1997ஆண்டின் பிற்பகுதியில் வெற்றி நிச்சயம் ( ஜெயசிக்குறு) படை நடவடிக்கையின் போது காயமடைந்தார்.



சரத் பொன்சேகா கைது செய்யப்பட்டதன் பின்னர் அவரின் ஆதரவாளர்கள் நாடளாவிய ரீதியில் தாக்குதலுக்கு உள்ளாகி வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment