Thursday, January 28, 2010
தயாராக வைக்கப்பட்டிருந்த 20முன்னாள் இராணுவ கொமாண்டோக்கள் ஆயுதங்களுடன் கைது
தேர்தல் தினமான இன்று வன்முறைகளில் ஈடுபடுவதற்கென தயாராகவிருந்த 20 முன்னாள் இராணுவ கொமாண்டோக்கள் ஆயுதங்களுடன் நேற்று கைது செய்யப்பட்டிருப்பதாக இராணுவ ஊடகப் பேச்சாளர் பிரிகேடியர் உதய நாணயக்கார தெரிவித்துள்ளார். காலி, கொக்கரெல்ல பிரதேசத்தில் வைத்தே இவர்கள் கையும்மெய்யுமாக கைது செய்யப்பட்டுள்ளனர். தேர்தலின்போது வன்முறைகளை முன்னெடுப்பதற்காக பாரிய திட்டங்களை இவர்கள் தீட்டிவருவதாக கிடைத்த தகவலையடுத்து கொழும்பிலிருந்து சென்ற விசேட இராணுவக்குழுவினரே மேற்படி 20முன்னாள் கொமாண்டோக்களை ஆயுதங்களுடன் கைதுசெய்திருப்பதாக இராணுவப் பேச்சாளர் தெரிவித்துள்ளார். கைது செய்யப்பட்டுள்ள 20பேரும் இராணுவ பொலிஸார் மற்றும் சி.ஐ.டி.யினரால் தொடர்ந்தும் விசாரணைக்கு உட்படுத்தப்பட்டு வருவதாகவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார். இவர்கள் முன்னாள் இராணுவ கொமாண்டோ பிரிவினரென தெரிய வந்த போதும், இவர்கள் ஒவ்வொருவரும் என்னென்ன தரங்களைச் சேர்ந்தவர்களென்ற விவரம் பூரண விசாரணகளுக்குப் பின்னரே தெரியவருமெனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment