Thursday, January 28, 2010
இத்தாலியிலுள்ள இந்தியத் தூதுரகத்துக்கு புலிகளின் பெயரில் வெடிபொருள் பார்சல் அனுப்பி வைப்பு
இத்தாலி ரோம்நகரில் அமைந்துள்ள இந்தியத் தூதரகத்திற்கு புலிகளின் பெயரில் ஐஇடி எனப்படும் வெடிபொருள் தபால்மூலம் பார்சலில் அனுப்பி வைக்கப்பட்டதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதையடுத்து தூதரகத்திற்கு பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டுள்ளது. இப்பார்சல் ஜனவரி 20ம் திகதி தூதரகத்திற்கு வந்ததாகவும், அதன் அனுப்புநர் பெயரில் இத்தாலி, புலிகள் என குறிப்பிடப்பட்டிருந்ததாகவும் இத்தாலிக்கான இந்தியத்தூதுவர் ஆரிப் கான் தெரிவித்துள்ளார். சந்தேகத்திற்கிடமான தபால் பொதி கிடைக்கப்பெற்றதும் தூதரக பாதுகாப்பு உத்தியோகத்தர்கள் உடனடியாக பொலீசாரை வரவழைத்து சோதனைகளை மேற்கொண்டதாகவும் கூறப்பட்டுள்ளது. இதனைத் தொடர்ந்து தூதரகத்தின் பாதுகாப்பும் அதிகரிக்கப்பட்டுள்ளது
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment