Thursday, January 28, 2010
இடம்பெயர்ந்த மக்களில் 31ஆயிரம்பேர் தலைமறைவாகியுள்ளதாக தெரிவிக்கப்படுவதற்கு வவுனியா அரசஅதிபர் மறுப்பு
சுதந்திரமாக வெளியில் சென்றுவர அனுமதி வழங்கப்பட்ட இடம்பெயர்ந்த மக்களில் சுமார் 31 ஆயிரம் பேர் தலைமறைவாகியுள்ளதாக சில ஊடகங்கள் தெரிவித்த குற்றச்சாட்டை வவுனியா மாவட்ட அரசாங்க அதிபர் திருமதி பி.எஸ்.எம். சார்ளஸ் முழுமையாக நிராகரித்துள்ளார். உறவினர் மற்றும் நண்பர்களின் வீடுகளுக்கு சென்றுவரும் அனுமதியைப் பயன்படுத்தி நாளாந்தம் 25ஆயிரம்பேர் நலன்புரி முகாம்களுக்கு வெளியில் இருப்பதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார். தற்பொழுது ஒரு லட்சத்துக்கும் குறைவான மக்களே மெனிக்பாமில் உள்ளனர். இவர்களில் 25ஆயிரம் பேர் மாறி மாறி விசேட அனுமதியுடன் வெளியில்சென்று வருகின்றனர். வெளியில்செல்லும் அனைவரும் திரும்பி வருகின்றனரென்றும் அரசாங்க அதிபர் மேலும் தெரிவித்துள்ளார்.
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment